Tuesday, 28 April 2015

தமிழ் இலக்கணம் எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாகத் தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,
  1. எழுத்து
  2. சொல்
  3. பொருள்
  4. யாப்பு
  5. அணி
அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

பொருளடக்கம்

எழுத்து

முதலெழுத்து

"எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப"
"உயிரும் உடம்புமாம் முப்பது முதலே"
அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்
உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும். மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும்.

சார்பெழுத்துகள்

"உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
ப ஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்"
  1. உயிர்மெய் எழுத்து
  2. ஆய்த எழுத்து
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலுகரம்
  6. குற்றியலிகரம்
  7. ஐகாரக் குறுக்கம்
  8. ஔகாரக் குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்
எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன
இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12 , மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய் எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல் ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216) மற்றும் ஆய்தம் ஆகிய 247 எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும்.

எழுத்து குறித்த இலக்கணச் செய்தி

எழுத்தெண்ணிச் சீரும் அடியும் வரையறுக்கும் நிலையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
வஞ்சியுரிச்சீர், குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழி நெடிலடி போன்றவை எழுத்தடிப்படையில் எழுத்தெண்ணி சீர்களும் அடிகளுமாகும்.
வஞ்சியுரிச்சீர்
  • நேர் இறுதி ஐந்து எழுத்து
  • நிரை இறுதி ஆறு எழுத்து
  • சிறுமை மூன்று எழுத்து
  • பெருமை ஆறு எழுத்து
  • 4 முதல் 6 எழுத்து வரை - குறளடி
  • 7 முதல் 9 எழுத்து வரை - சிந்தடி
  • 10 முதல் 14 எழுத்து வரை - நேரடி
  • 15 முதல் 17 எழுத்து வரை - நெடிலடி
  • 18 முதல் 20 எழுத்து வரை - கழி நெடிலடி
மெய்யெழுத்து உயிரில் எழுத்து என்று குறிக்கப் பெறுகிறது.
ஓரடிக்கு 4 முதல் 20 எழுத்து வரை ஆசிரியப்பா வருமென்றும், 7 முதல் 16 எழுத்து வரை வெண்பா வருமென்றும், 13 முதல் 20 எழுத்து வரை கலிப்பா வருமென்றும் தொல்காப்பியர் குறிக்கிறார்.[1]

சொல்

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
எ.கா: வீடு, கண், போ,
சொல்லின் வகைகள்
  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

பொருள்

பொருள் இரண்டு வகைப்படும். அவை,
  1. அகப்பொருள்
  2. புறப்பொருள்
தமிழ் இலக்கியங்களுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும். ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள்.அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்.

யாப்பு

யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் இவை யாவும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும்.

யாப்பின் உறுப்புகள்

யாப்பு வேறு, செய்யுள் வேறு; அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை
  1. எழுத்து
  2. அசை
  3. சீர்
  4. தளை
  5. அடி
  6. தொடை
உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை மற்றும் நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும். தளை என்னும் சொல்லுக்குக் கட்டுவது, பொருந்துவது என்பது பொருளாகும். நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றியும், ஒன்றாமலும் வருவது தளையாகும். இவ்வாறாக சீர்கள் இணைந்த தளைகள் பொருந்தி நின்று அடுத்து நடப்பது அடி எனப்படும்.அடிகளும் அவ்வடிகளில் உள்ள சீர்களும் பொருத்தமுற தொடுக்கப்படுவது தொடையாகும். தொடை என்பது காரணப்பெயராகும்.

யாப்பின் அடிப்படையில் பா வகைகள்

  1. வெண்பா
  2. ஆசிரியப்பா
  3. கலிப்பா
  4. வஞ்சிப்பா

அணி

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணி பலவகைப்படும். அவற்றுள் சில,
  1. தன்மையணி
  2. உவமையணி
  3. உருவக அணி
  4. பின்வருநிலையணி
  5. தற்குறிப்பேற்ற அணி
  6. வஞ்சப் புகழ்ச்சியணி
  7. வேற்றுமை அணி
  8. இல்பொருள் உவமையணி
  9. எடுத்துக்காட்டு உவமையணி
  10. இரட்டுறமொழிதலணி                                                                                                                                                                                                                                                                

    எழுத்து (இலக்கணம்)

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
    தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து (letter) என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.
  11. முதலெழுத்து, சார்பெழுத்து எனபன மொழியில் எழுத்து தனித்தன்மை, சார்புத்தன்மை குறித்த பாகுபாடுகள்.
  12. உயிரெழுத்து, மெய்யெழுத்து என்பன அவற்றின் இயங்கு-தன்மை குறித்த பாடுபாடு. மெய் தனித்து இயங்காது.
  13. குறில், நெடில் எனபன எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு பற்றியவை.
  14. வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன எழுத்தின் பிறப்பிடத்தால் ஒலிப்பில் தோன்றும் வன்மை, மெனமை, இடைமை பற்றியவை.
  15. சுட்டு, வினா என்பன மொழியிடை வரும் இடைச்சொல்லாகிப் பொருள் உணர்த்தும் எழுத்துக்கள். தனிநிலையில் இவை பொருள் உணர்த்துவது இல்லை.
  16. மயங்கும் எழுத்துக்கள், மயங்கா எழுத்துக்கள் என்பவை நாவால் ஒலிக்கமுடியும் எழுத்துக்களையும், ஒலிக்கமுடியாத எழுத்துக்களையும் குறிப்பன.
  17. மொழிமுதல் எழுத்துக்கள் என்பவை மொழியில் முதல் எழுத்தாக வருபவை
  18. மொழியிறுதி எழுத்துக்கள் என்பவை மொழியின் இறுதியில் வருபவை.
  19. புணர்ச்சியில் மயங்கும் எழுத்துக்கள

    சொல்

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
    (சொல் (இலக்கணம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
    சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. சொல் என்றாலே தமிழில் சிறியது என்றும் பொருள் படுவது. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப் படுகின்றது. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லைக் கிளவி, பதம் என்றும் கூறுவது உண்டு.
    • சொல்லைத் தொல்காப்பியம் ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டு இறந்து இசைக்கும் பொதுமொழி எனப் பாகுபடுத்திப் பார்த்தது. [1]
    • சுமார் 1600 ஆண்டுகளுக்குப் பின்னர் மொழியை ஆராய்த நன்னூல் ஈழெழுத்தொருமொழி என்னும் பகுப்பைக் கைவிட்டுவிட்டு 'தனியெழுத்துப் பதம்', 'தொடரெழுத்துப் பதம்' என இரண்டாகப் பாகுபடுத்திக் கொண்டுள்ளது.[2]
    • மேலும் நன்னுல் சொல்லை ஒருமொழி, தொடர்மொழி, பொதுமொழி எனப் பெயரிட்டுக்கொண்டு வேறு மூன்று வகையில் கண்டது. [3]

    பொருளடக்கம்

    தொல்காப்பியத்தில் விளக்கம்

    சொல்
    நிறைசொல்
    பெயர்ச்சொல் வினைச்சொல்
    குறைசொல்
    இடைச்சொல் உரிச்சொல்
    வழங்குநிலை
    இயற்சொல் திரிசொல்
    திசைச்சொல் வடசொல்
    மொழிநிலை
    ஓரெழுத்தொருமொழி ஈரெழுத்தொருமொழி
    இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி [4]
    சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கருதப்படும் தொல்காபியத்தில், சொல்லுக்கு விளக்கம் தரும் பல நூற்பாக்கள் சொல்லதிகாரம் என்னும் பகுதியில் உள்ளன. அவ்வதிகாரத்தில் முதல் நூற்பாவில் [5] எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.
    சொல் எனப் படுப பெயரே வினையே என்று
    ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே [6] என்று சொற்கள் அடிப்படையில் பெயர்ச்சொல், வினைச்சொல் என்று இரண்டே வகை என்றும் பிற சொல் வகைகள் (உரிச்சொல், இடைச்சொல் முதலியன) இவை இரண்டிலிருந்து மருவி வருவனவே என்றும் கூறப்பட்டுள்ளது.
    தமிழில் ஓர் எழுத்தும் பொருள் தர வல்லது. காட்டாக கை, தை, மை, வா, போ. இவ்வகைச்சொற்களுக்கு ஓரெழுத்தொருமொழி என்று பெயர்.

    பகாப்பதம்

    பகுக்கப்படாத இயல்பையுடைய சொற்கள் பகாப்பதம் ஆகும். அதாவது சேரடியா ஒரு சடப்பொருளையோ அல்லது கருத்துப்பொருளையோ குறித்து நிற்கும் சொற்கள் பகாப்பதம் ஆகும். காட்டாக நாய், மரம், வா.

    தமிழ் இலக்கணம் (நூல்) தரப்பட்ட எடுத்துக்காட்டுகள்:
  20. நிலம், நீர், மரம் - பொயர்ப்பகாப்பதம்
  21. நட, வா, உண் - வினைப்பகாப்பதம்
  22. மற்று, ஏ, ஒ - இடைப்பகாப்பதம்
  23. உறு, தவ, நனி - உரிப்பகாப்பதம்

பகுபதம்

பகுக்கப்படும் இயல்புடைய சொற்கள் பகுபதம் ஆகும். பகுபதங்களை பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என இரண்டாக பகுக்கலாம். வினைப்பகுபதம் தெரிநிலை வினைப்பகுபதம், குறிப்பு வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்.

பொருள் இலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழ்விற்கு பொருள் தரும் கூறுகளை விளக்கிக் காட்டுவது பொருள் இலக்கணமாகும். பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது.மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை.பாடல்களில் வரும் பொருள் எப்படி எல்லாம் இருக்கும் என்றுஎடுத்துக் கூறும் பொருள் இலக்கணம் தமிழுக்குத் தனிச் சிறப்புவாய்ந்ததாகும்.
பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்றுஇருவகைப்படும். அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒருபெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக்கூறுவதாகும். புறப்பொருள் என்பது வீரம், போர், வெற்றி, கொடை, நிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும்.

பொருளடக்கம்

அகப்பொருள் இலக்கணம்

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது. இதில் ஆணை தலைவன் என்றும் பெண்ணை தலைவி என்றும் கூறுவர். தலைவியின் தோழியும் அகப்பொருள் பாடல்களில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு பாத்திரம் ஆவாள். காதல் பற்றிப் பாடும்போது தலைவன் தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை. காதல் உணர்ச்சி எல்லோருக்கும் பொது என்பதால் தனி ஒருவருடைய பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை. அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மையைக் கொண்டிருக்கும். எல்லாப் பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும். ஒரே பாடலில் இருவர் உரையாடுவது போன்ற பாடல்களும் கலித்தொகையில் உண்டு.[1] ஒவ்வொரு பாடலுக்கும் பிற்காலத்தில் திணை, துறை வகுத்துக் காட்டியுள்ளனர்.

அகப்பொருள் திணைகள்

  1. குறிஞ்சித்திணை
  2. முல்லைத்திணை
  3. மருதத்திணை
  4. நெய்தல்திணை
  5. பாலைத்திணை
இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை,
  1. முதற்பொருள்
  2. கருப்பொருள்
  3. உரிப்பொருள்
ஆகியன ஆகும்.

புறப்பொருள் இலக்கணம்

புறப்பொருள் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். ஒருகுறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோபெயரைச் சுட்டி அவனுடைய வீரம், வெற்றி, கொடைமுதலியவற்றைப் பாடுவது புறப்பொருள் மரபு ஆகும். இவ்வாறு அன்றி ஒருவருக்கு அறிவுரை சொல்லுவது போலவோ யாரையும் சுட்டிக் கூறாமலோ புறப்பொருள் பாடல் அமைவதும் உண்டு. அகப்பொருள் பாடல் போலவே புறப்பொருள் பாடல்களும்திணை, துறை அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்ற இலக்கணங்கள் புறப்பொருளுக்கு இல்லை. புறப்பொருள் திணைகள் போரை அடிப்படையாகக் கொண்டவை. போர் செய்யச் செல்லும் அரசனும் படைகளும் போரிடும் முறைக்கு ஏற்ப வெவ்வேறு பூக்களை அணிந்து சென்று போரிடுவர். அவர்கள்அணிந்து செல்லும் பூக்களின் பெயர்களே திணைகளுக்குப் பெயர்களாக அமைந்துள்ளன. பின்வரும் புறத்திணைகள் யாவும் பூக்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவையே.

புறப்பொருள் திணைகள்

வெட்சித்திணை

பழைய காலத்தில் பகை அரசனிடம் போர்செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகை அரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இது வெட்சித்திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.

கரந்தைத்திணை

பகை அரசன் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை அவற்றிற்கு உரியவன் மீட்டுவரச் செய்யும் போர், கரந்தைத்திணை எனப்படும். கரந்தை வீரன் கரந்தைப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.

வஞ்சித்திணை

பகை அரசன் நாட்டைப் பிடிப்பதற்காக அந்தநாட்டின் மேல் படை எடுத்துச் செல்லுதல் வஞ்சித்திணை எனப்படும். வஞ்சி வீரன், வஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

காஞ்சித்திணை

படை எடுத்து வரும் பகை அரசனைத் தடுத்துத் தன் நாட்டைக் காக்க நினைக்கும் அரசன் போருக்குச் செல்லுதல் காஞ்சித்திணை எனப்படும். காஞ்சி வீரன் காஞ்சிப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.

நொச்சித்திணை

பகை அரசன் படை எடுத்து வந்து கோட்டை மதிலைச் சூழ்ந்து கொண்டபோது, தன்னுடைய கோட்டையைக் காத்துக் கொள்ள அரசன் போர் செய்தல் நொச்சித்திணை எனப்படும். நொச்சி வீரன் நொச்சிப் பூச் சூடி, போருக்குச்செல்வான்.

உழிஞைத்திணை

பகை அரசனுடைய கோட்டையை வெல்லக் கருதிய அரசன் தன் படைகளோடு மதிலைச் சுற்றி முற்றுகை இடுதல் உழிஞைத்திணை எனப்படும். உழிஞை வீரன் உழிஞைப்பூச் சூடி, போருக்குச் செல்வான்.

தும்பைத்திணை

பகை அரசர்கள் இருவரும் போர்க் களத்தில் எதிர் எதிர் நின்று போரிடுதல் தும்பைத்திணை எனப்படும்.தும்பை வீரன் தும்பைப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.
இந்தத் திணைகளுடன் வாகைத்திணை, பாடாண்திணை, பொதுவியல்திணை ஆகிய மூன்று புறத்திணைகளும் உள்ளன.இவற்றையும் சேர்த்து, பத்துப் புறத்திணைகள் என்று கூறுவர். கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டையும் சேர்த்து, பன்னிரண்டு புறத்திணை என்றும் கூறுவர்.

வாகைத்திணை

போரில் வெற்றி பெற்ற அரசனைப் புகழ்ந்துபாடுதல் வாகைத்திணை எனப்படும். வெற்றி பெற்றவர்கள் வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவார்கள்.

பாடாண்திணை

இதுவரை சொன்ன புறத்திணைகள் போர்நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. பாடாண்திணையில் கொடை, கடவுள் வாழ்த்து, அரசனை வாழ்த்துதல் முதலியவைஇடம்பெறும்.

பொதுவியல்

போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடுதல், போரில் இறந்த வீரர்களின் மனைவியர் இரங்கல், நிலையாமை முதலியவை பொதுவியல் திணையில் இடம்பெறும்.

கைக்கிளை

தன்னை விரும்பாத ஒரு பெண்ணிடம் ஒருவன் காதல் கொள்வது கைக்கிளைத்திணை எனப்படும். இதை ஒருதலைக் காதல் என்று கூறுவர்.

பெருந்திணை

தன்னை விட வயதில் மிகவும் இளைய பெண் ஒருத்தியிடம் ஒருவன் காதல் கொள்வது பெருந்திணை எனப்படும்.இதைப் பொருந்தாக் காதல் என்று கூறுவர்.
கைக்கிளை, பெருந்திணை என்னும் இவ்விரண்டு திணைகளையும் அகப்பொருள் திணையாகவும் கூறுவர்.

யாப்பிலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாத்தல் என்னும் சொல் கட்டுதல் என்னும் பொருளை உடையது. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற உறுப்புக்களை ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே செய்யுள் யாத்தல் என்கிறார்கள். எனவே இந்த யாத்தலுக்கு உரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.
யாப்பிலக்கணம் என்பது செய்யுளின் இலக்கணம் என்றும் பொருள் தரும். இதில் உறுப்பியல், செய்யுளியல் என இருவகைகள் உள்ளன. உறுப்பியலில் செய்யுள் உறுப்புக்களின் இலக்கணமும், செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுட்களின் இலக்கணமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.[1]
மேலும் உறுப்பியலுக்கு புறனடையாக உள்ளவற்றை ஒழிபியல் என்ற மூன்றாவது வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பொருளடக்கம்

யாப்பு என்னும் சொல்

சங்க நூல்களிலும் இச்சொல் இப்பொருளில் பரவலாக வருகிறது. யாப்பு என்னும் சொல்லைத் திருவள்ளுவரும் இந்தப் பொருளில் பின்வரும் குறள்களில் கையாண்டுள்ளார்.
கழல் யாப்பு [2]
யாப்பினுள் அட்டிய நீர் [3]
யாக்க நட்பு [4]
யானையால் யானை யாத்து அற்று [5]
பாட்டு, தூக்கு, தொடர், செய்யுள் எல்லாம் யாப்பு என்ற சொல்லின் பொருள் கூறும் பிற சொற்களாகும்.[6]

யாப்பிலக்கண நூல்கள்

தமிழில் இன்று கிடைக்கக்கூடியதாக உள்ள நூல்களுள் காலத்தால் முந்தியது தொல்காப்பியம். ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படும் இந்நூல், அதன் மூன்று அதிகாரங்களில் ஒன்றான பொருளதிகாரத்தில் யாப்பிலக்கணம் பற்றிக் கூறுகின்றது. மேலும் ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பொருளதிகாரம், அப்பிரிவுகளில் ஒன்றே செய்யுளியல் என்னும் யாப்பிலக்கணமாகும். இதைத் தவிர, யாப்பிலக்கணம் கூறும் மேலும் பல நூல்கள் காலத்துக்குக் காலம் இயற்றப்பட்டு வந்தன.
நத்தத்தனார், நல்லாதனார், அவிநயனார், பல்காயனார், கையனார், மயேச்சுரனார், பேராசிரியர், பரிமாணனார், வாய்ப்பியனார், காக்கைபாடினியார், சிறுகாக்கை பாடினியார் போன்ற புலவர்கள் யாப்பிலக்கணம் செய்தனர். சங்க யாப்பு, பெரியபம்மம், நாலடி நாற்பது.செயன்முறை, செயிற்றியம் போன்றவையும் யாப்பிலக்கணங் கூறும் நூல்களே. ஆயினும், தொல்காப்பியம் தவிர இன்று வரை நிலைத்திருப்பவை அமிர்தசாகரர் என்பவர் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்னும் இரண்டு மட்டுமே. இவ்விரண்டு நூல்களும் செய்யுள் இலக்கணத்தைத் தமிழில் செப்பமுற விளக்கும் யாப்பிலக்கண நூல்களாகும்.

அணி இலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அணி (இலக்கணம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது. அவற்றுள் சில,

பொருள் அணிகள்

  1. அதிசய அணி(உயர்வு நவிற்சி அணி)
  2. அவநுதியணி
  3. ஆர்வமொழியணி(மகிழ்ச்சி அணி)
  4. இலேச அணி
  5. உதாத்தவணி
  6. ஏதுவணி
  7. ஒட்டணி
  8. ஒப்புமைக் கூட்டவணி
  9. ஒழித்துக்காட்டணி
  10. சங்கீரணவணி
  11. சமாகிதவணி
  12. சிலேடையணி
  13. சுவையணி
  14. தற்குறிப்பேற்ற அணி
  15. தன்மேம்பாட்டுரை அணி
  16. தன்மையணி(தன்மை நவிற்சி அணி,இயல்பு நவிற்சி அணி)
  17. தீவக அணி
  18. நிதரிசன அணி(காட்சிப் பொருள் வைப்பு அணி)
  19. நிரல்நிறை அணி
  20. நுட்ப அணி
  21. பரியாய அணி
  22. பரிவருத்தனை அணி
  23. பாவிக அணி
  24. பின்வருநிலையணி(பொருள் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)
  25. புகழாப்புகழ்ச்சி அணி
  26. புணர்நிலையணி
  27. மயக்க அணி
  28. மாறுபடுபுகழ்நிலையணி
  29. முன்னவிலக்கணி
  30. வாழ்த்தணி
  31. விசேட அணி(சிறப்பு அணி)
  32. விபாவனை அணி
  33. விரோதவணி
  34. வேற்றுப்பொருள் வைப்பணி
  35. வேற்றுமையணி

சொல் அணிகள்

  1. எதுகை
  2. மோனை
  3. சிலேடை
  4. மடக்கு
  5. பின்வருநிலையணி(சொல் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)
  6. அந்தாதி

வகைப்படுத்தவேண்டிய அணிகள்

  1. இரட்டுறமொழிதல் அணி
  2. இல்பொருள் உவமையணி
  3. உயர்வு நவிற்சி அணி
  4. உருவக அணி
  5. உவமையணி
  6. எடுத்துக்காட்டு உவமையணி
  7. தன்மை நவிற்சி அணி
  8. பிறிது மொழிதல் அணி
  9. வஞ்சப் புகழ்ச்சியணி

Basics of English Grammar

If you just started learning English, you first need to know some basic rules of the language. Developing a solid foundation in English grammar will not only help you create your own sentences correctly but will also make it easier to improve your communication skills in both spoken and written English.

Study all the lessons below and incorporate your learning into your speaking and writing.

1. Singular and Plural Nouns
2. Count Nouns vs. Non-Count Nouns
3. Possessive Nouns
4. Pronouns
5. 'Be' Verbs
6. Action Verbs
7. Adjectives
8. Comparative and Superlative Adjectives
9. Adverbs
10. Simple Tense
11. Progressive and Perfect Tense
12. Perfect Progressive Tense
13. Irregular Verbs
14. Gerunds
15. Infinitives 1
16. Infinitives 2
17. Active Voice and Passive Voice
18. Indicative, Imperative, Subjunctive Mood
19. Auxiliary Verbs - 'Be,' 'Do,' 'Have'
20. Auxiliary Verbs - 'Will/Would,' 'Shall/Should'
21. Auxiliary Verbs - 'Can/Could,' 'May/Might/Must'
22. Prepositions - 'On,' 'At,' 'In'
23. Prepositions - 'Of,' 'To,' 'For'
24. Prepositions - 'With,' 'Over,' 'By'
25. Conjunctions - Coordinating and Correlative
26. Conjunctions - Subordinating
27. Conjunctive Adverbs
28. Articles - Indefinite and Definite
29. Interjections
30. Capitalization

Grammar Guide



English grammar guide
Do you have a question about the correct usage of the semicolon or how to place adverbs in a sentence? If so, you've come to the right place. Edufind.com is a complete English grammar guide filled with the rules of English usage. Each grammatical rule is explained in plain English with several examples, and when needed, counter-examples. The grammatical rules covered by this guide are categorized below. English grammar is not always easy to understand, but by using this guide you should be able to remind yourself of the rules of English usage and speak or write English with confidence.
Nouns are people, places, or things, They tell us what we are talking about. The words cat, Jack, rock, Africa, & it are nouns.
Adjectives modify, or describe, nouns. The words tall, beautiful, irresponsible, & boring are adjectives.
Adverbs modify adjectives, verbs, or other adverbs. They tell us how, when, and where things happen. They express quantity, intensity, frequency, and opinions.

Articles, quantifiers, and other determiners modify nouns. They ressemble adjectives in that way. Determiners help us say what we are talking about.
Verbs are action words. They tell us what is happening and when (past, present, future). Verbs can also express possibilities and conditions.
When we report what someone says, we can cite the person directly or indirectly. Indirect speech rules are an important area of grammar.

Punctuation is not part of oral grammar, but it is essential to master in written English.
We use relative clauses in English to create more complex and more precise sentences.